உறவுகளை கோரி 2000 நாட்கள் கடந்தது
யதுர்ஷன் (தம்பிலுவில்)
அம்பாறை மாவட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளை கோரி இன்றுடன் 2000 நிறைவு.
இதனை தொடர்ந்து பாரிய கவனயீர்ப்பு போராட்டம் இன்று திருக்கோவில், தம்பிலுவில் பகுதிகளில் இடம் பெற்றது.
பிரதான வீதி வழியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு திருக்கோவில் மணிகூண்டு கோபுரத்தினை வந்தடைத்தது.
இதன்போது சமூக செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீபன், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments: