எரிபொருள் நிலையங்கள் மூடப்படும்


பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக கனிம எண்ணெய் பிரிப்பாளர் சங்கத்தின் இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன தெரிவித்துள்ளார்.

QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் செய்யப்படுகின்ற நிலையில் கிராமப்புறங்களில் அமைந்துள்ள பல எரிபொருள் நிலையங்கள் மூடப்படும் அபாயத்தில் இருக்கிறது.

மின்சாரக் கட்டணம் மற்றும் ஏனைய செலவுகள் அதிகரிப்பு, எரிபொருள் விற்பனை மட்டுப்படுத்தப்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது மேலும் குறிப்பிட்டுள்ளார்.


No comments: