பெண் பொலிஸை தாக்கிய குற்றச்சாட்டில் களனி பொலிஸ் அதிகாரி கைது

பொலிஸ் பெண் அதிகாரியொருவரை தாக்கிய சம்பவம் தொடர்பாக களனி பொலிஸ் அலுவலகத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 25ஆம் திகதி இரவு கடவத்த பகுதியில் இடம்பெற்ற இசைக் கச்சேரி ஒன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பெண் அதிகாரியை தாக்கிஅவரது கைத்தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த சம்பவத்தின் பின் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி முன்வைத்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரி பெப்ரவரி 27 ம் திகதி கைது செய்யப்பட்டு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.














No comments: