போதை மாத்திரை வழங்கிய வைத்தியர் கைது





பதுளை வைத்தியசாலை 145 போதை மாத்திரைகளை வைத்திருந்த வைத்தியர் ஒருவர் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை மயிலகஸ்தென்னவில் தனது தனியார் வைத்திய நிலையத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் யுவதிகளுக்கு போதைப்பொருள் விற்பனை செய்வதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை சோதனையிட்ட போது குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரின் காரும் போதைப்பொருளும் பதுளை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு அவரை இன்று (15) பதுளை நீதவான் நீதிமன்றத்திற்கு ஒப்படைப்பதாக தகவல் கிடைத்துள்ளன.

No comments: