நானுஒயா ரதல்ல பகுதியில் விபத்து - மூவர் படுகாயம்


நானுஒயா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நானுஒயா ரதல்ல குறுக்கு பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில்மூவர் படுகாயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இவ் விபத்து 14.02.2023 அன்று இரவு இடம்பெற்றுள்ளதாக நானுஒயா பொலிசார் தெரிவித்தனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை நகரத்தை நோக்கி பயணித்த போதே வீதியை விட்டு விலகி பாதுகாப்பு காம்பியில் மேதி விபத்துக்குள்ளாகியது.

கடந்த ஜனவரி 29ம் திகதி 7 உயிர்களை காவுகொண்ட கோர விபத்து இடம்பெற்ற அதே இடத்திலேயே விபத்தும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இவ் விபத்து மேலதிக விசாரணைகளை  நானுஒயா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments: