உள்நாட்டு கடனை செலுத்த முடியாமல் பரிதாபிக்கும் இலங்கை
வெளிநாட்டு கடனை செலுத்த தவறிய அரசாங்கம் உள்நாட்டு கடன் பொறியிலும் சிக்கியுள்ளது.
திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி பத்திரங்கள் மூலம் அரசாங்கம் 1,033 பில்லியன் ரூபாவை கடனாகப் பெற்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் பெற்ற கடன்களை செலுத்துவதற்காக வெளிநாட்டு கடன்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் பிரச்சினை ஏற்படக்கூடிய நிலமை உருவாகும் என கூறியுள்ளார்.
No comments: