பிலிப்பைன்ஸ் பெண்ணை திருமணம் செய்து துன்புறுத்திய இலங்கை நபர்

புலத்சிங்கள பகுதியில் தனது இலங்கை கணவர் துன்புறுத்தல் செய்வதாக கூறி 2 பிள்ளைகளின் தாயான பிலிப்பைன்ஸ் பெண் பொலிஸ் அவசர இலத்திற்கு நேற்று அழைப்பேற்படுத்தியுள்ளார்.

புலத்சிங்கள கதன்வாடிய 50 ஏக்கர் பகுதியில்  வசிக்கும் நபர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பிலிப்பைன்ஸில் தொழிலுக்கு சென்ற போது அந்த நாட்டு பெண்ணுடன் காதல் தொடர்பு ஏற்பட்டு பின் இலங்கை சட்டத்திற்கமைய, திருமணம் செய்துள்ளனர் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

தற்போது அவர்களுக்கு 5 வயதுடைய பெண் பிள்ளை மற்றும் 2 வயதுடைய ஆண் குழந்தையும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் தனது கணவர் கொடுமைப்படுத்துவதால் தொடர்ந்து சண்டை ஏற்படுவதனால் வீட்டிற்கு மீண்டும் செல்ல முடியாதென பொலிஸாரிடம் தெரிவித்துள்ளர்.

பொலிஸ் அதிகாரிகள் இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்


No comments: