கடவுச்சீட்டு பெறும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பொது மக்கள் தகவல் கேந்திர நிலையத்தின் நடவடிக்கைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
0112 101 500 அல்லது 0112 101 600 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடாக ஒரே நேரத்தில் 30 பேர் இந்த நிலையத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
குறுந்தகவல்கள் மூலம் விபரங்களை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
காலை 8.00 மணி முதல் மாலை 4.45 வரை இதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது
No comments: