திருகோணமலையில் மீனவரொருவர் சடலமாக மீட்பு



திருகோணமலை - மூதூர் பகுதியில் மீனவரொருவர் கடந்த 24 ஆம் திகதி அதிகாலை மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் கிராம மக்கள் மற்றும் மீனவர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

குறித்த மீனவரின் சடலம் கடலில் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 35 வயதுடைய மூதூர் -பஹ்ரியா நகரைச் சேர்ந்த அருளானந்தம் முகமட் யூசுப் என தெரிய வந்துள்ளது.

மரணம் தொடர்பாக  மூதூர் பொலிஸார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments: