சிவனொளிபாதமலையேறுவதற்கு வருகை தந்த 15 இளைஞர்கள் கைது



சிவனொளிபாதமலையேறுவதற்கு வருகை தந்த 15 இளைஞர்கள் கைது செய்யப்பட்ட தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 ஆம் திகதி ஹட்டன் ரயில் நிலைய நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த இளைஞர்கள் போதைப்பொருட்களுடன் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.

ஹெரோயின், கஞ்சா, கஞ்சா கலந்த புகையிலை தூள் மற்றும் சட்டவிரோதமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள் என்பன கைதானவர்களிடமிருந்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் கொழும்பு, காலி, அநுராதபுரம் மற்றும் குருணாகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைதானவர்கள் அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்  அவர்களை எதிர்வரும் 28 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கட்டளையிட்டு, சரீரப் பிணையில் விடுக்கப்பட்டுள்ளனர்.


No comments: