கிளிநொச்சி வீதி விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் குடும்பதாரிடம் ஒப்படைக்கப்பட்டது



நேற்றைய தினம் (25) கிளிநொச்சி - கண்டாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் குடும்பதாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்தவர் 57 வயதுடைய 6 பிள்ளைகளின் தந்தையான கதிரவேலு யாதவராசா என தெரியவந்துள்ளது

பரந்தன் பகுதியிலிருந்து முல்லைத்தீவு நோக்கிச் சென்று கொண்டிருந்த பார ஊர்தியில் எதிர்த்திசையிலிருந்து துவிச்சக்கர வண்டியில் வந்த குறித்த நபர் மோதியதில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


No comments: