கண்டி - ஹந்தானையில் முதலாவது பறவைகள் சரணாலயம்
கண்டி - ஹந்தானை பகுதியில் எதிர்வரும் 23ஆம் திகதி இலங்கையின் முதலாவது சர்வதேச தரத்திலான பறவைகள் சரணாலயம் திறக்கப்படவுள்ளது.
பொதுமக்கள் கண்டுகளிப்பதற்காக அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 100 பறவைகளைக் கொண்டதாக இந்தச் சரணாலயம் அமையவுள்ளது.
இங்கு சுற்றுலாப்பயணிகள் நாள் முழுவதும் சரணாலயத்திற்குள் தங்கியிருக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
No comments: