கிளிநொச்சியில் 4 கிலோ கஞ்சாவுடன் கைதாகிய பெண்

 கிளிநொச்சி மருதநகர் பிரதேசத்தில் 32 வயதுடைய  பெண் 4 kg 100g கஞ்சாவுடன்   அவரது வீட்டில் வைத்து  விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரினரால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் குறித்த இடத்தை பார்வையிட்ட போது  மறைத்து வைத்திருந்த  கஞ்சா பொதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரனைகளை நடத்தி வருகின்றனர்.




No comments: