துருக்கி, சீரியா நில நடுக்கம் - 35 ஆயிரத்தை கடந்த இறப்பு எண்ணிக்கை

துருக்கி மற்றும் சீரிய நாட்டில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் தற்போதைய நிலவரப்படி நிலநடுக்கத்தால் துருக்கியில் 31 ஆயிரத்து 643 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிரியாவில் 3 ஆயிரத்து 581 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதனால், துருக்கி-சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்துவிழுந்துள்ளன. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவாரம் கடந்த நிலையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



No comments: