Breaking News வாக்குச் சீட்டு அச்சிடும் பணி நிறுத்தம்

2023 மார்ச்  09 உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வாக்குச் சீட்டு அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேர்தல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட கட்சிகளின் விபரங்கள் உள்ளடக்கிய வாக்குச் சீட்டு  அச்சிடப்பட்டு வந்த நிலையில் தற்போது அச்சிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.

இதனை உத்தியோகபூர்வமாக தேர்தல் திணைக்களத்திற்கு அரச அச்சக பிரிவு அறிவித்துள்ளது.

வாக்குச் சீட்டு அச்சிட போதியளவு பணம் இல்லை எனவும் தேர்தல்கள் திணைக்களத்தினால் பணம் வழங்கப்பட்டால் அச்சுப்பணிகளை ஆரம்பிக்கமுடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேர்தல்கள் திணைக்களம் கோரிய பணம் தொடர்பில் இதுவரை தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை.




No comments: