Update: நுவரெலியா பஸ் விபத்து காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
நுவரெலியா நானுஓயா ரந்தெல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று குன்றிலிருந்து விழுந்து விபத்துக்குள்ளானது.
கொழும்பு, தர்ஸ்டன் கல்லூரியில் இருந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தே நுவரெலியாவில் கல்விச் சுற்றுலா சென்றுகொண்டிருந்த போது இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து வேனுடன் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், 51 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் வேனில் வந்தவர்களே உயிரிழந்துள்ளதுடன் பேருந்தில் வந்தவர்களுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments: