Breaking news:- கொழும்பில் நாளை நீண்ட நேர நீர்வெட்டு.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள் உட்பட பல பகுதிகளுக்கு நாளை 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளது. நாளை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன் போது தெஹிவளை, கல்கிஸ்ஸ, மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும். மேலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள் மற்றும் கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபை பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுபெத்த பிரதேசங்களில் அக்காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாக அம்பத்தல துலுமன் நீரேற்று நிலையத்திற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்பட்டமையே இந்த நீர்வெட்டுக்குக் காரணமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: