திருக்கோவில் பிரதேசத்தில் வீடற்றவர்களுக்கு வீடு கையளிக்கும் நிகழ்வு.

 திருக்கோவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட  சங்கமன் கிராமத்தில்  பிரதேச செயலாளர் திரு.கஜேந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களில் இரண்டு குடும்பங்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டது.

தாண்டிய பகுதியில் காணப்படும் இரண்டு குடும்பங்களுக்கு குறித்த வீடுகள் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக பண்பாட்டு அறப்பணி மன்றத்தின் அனுசரணையில்  வழங்கப்பட்டது 

 இந் நிகழ்வில்  பிரதேச செயலாளர் திரு.கஜேந்திரன் உதவி பிரதேச செயலாளர் திரு .க.சதிசேகரன் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோருடன் மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி சமூக பண்பாட்டு அறப்பணி மன்றத்தின் இணைபாளர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட பயனாளர் குடும்பத்தினர்கள் என பலரும் ககலந்துகொண்டனர்







No comments: