பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுதியளித்தும் மின்வெட்டு தொடர்வதாக மக்கள் புகார்

நாட்டில் நடைபெற்று வரும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் முடியும் வரை மின்வெட்டுகளை விதிக்க மாட்டோம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) மற்றும் இலங்கை மின்சார சபை (CEB) உறுதியளித்த போதிலும் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, பரீட்சை காலத்தில் மின்வெட்டுகளை விதிக்க மாட்டோம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL), இலங்கை மின்சார சபை மற்றும் ஏனைய தொடர்புடைய அதிகாரிகள் ஒப்புக்கொண்டனர்.

உறுதியளிக்கப்பட்ட போதிலும் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இன்று ஒரு மணிநேரம் மின்வெட்டுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.





No comments: