ஆப்கானிஸ்தானை ஆட்டிப் படைக்கும் கடும் குளிர். 157 பேர் மரணம். பல்லாயிரம் கால்நடைகளும் பலி.
இதுபோன்ற சுமார் 70,000 விலங்குகள் குளிர் காரணமாக இறந்துள்ளன.
குளிர் காலநிலை காரணமாக மீட்புப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மிகவும் குளிரான மலைப் பகுதிகளுக்குச் செல்லும் பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டிருப்பதால், அந்தப் பகுதிகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. கடும் குளிரின் காரணமாக இந்த சாலைகளில் சிக்கி வாகனங்களில் சென்ற பலர் உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த பகுதிகளை அடைய ராணுவம் முயற்சித்துள்ளது.ஆனால் சில மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர்களை தரையிறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
“இறந்தவர்களில் பெரும்பாலோர் கால்நடை மேய்ப்பவர்கள் மற்றும் தொலைதூர கிராமப்புறங்களில் உள்ளவர்கள். அவர்களுக்கான போதிய மருத்துவ வசதிகள் கிடைப்பதிலும் சிரமங்கள் உள்ளன' என பேரிடர் மேலாண்மைக்கான பொறுப்பு அமைச்சர் முல்லா முகமது அப்பாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
No comments: