பாணந்துறையில் பேரதிர்ச்சி சம்பவம், பணத்துக்காக பெற்ற மகளை பாலியல் மோகிகளுக்கு கொடுத்த தாய்.

பாணந்துறையில் 15 வயது சிறுமி, சிறுமியின் தாயினால் பணத்திற்கு விற்கப்பட்டுள்ளார்.சிறுமிமைய துஷ்பிரயோகம் செய்தவர்களில் 84 வயது முதியவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.


பாணந்துறை பிரதேசத்தில் 15 வயது சிறுமியை வர்த்தகர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு பணத்திற்கு விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில் சிறுமியின் தாயும் சிறுமியை அனுபவித்த  நால்வரும் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்டவர்களில் 84 வயதுடைய ஒரு வயோதிபரும் அடங்குகிறார்.


பாணந்துறை கெசல்வத்த மற்றும் கொரக்கான பிரதேசத்தை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமியை பணத்திற்காக அழைத்துச் சென்ற ஏனைய நபர்களை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இளவயது சிறுமியொருவர் பணத்திற்காக முதியவர்களிடம் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரிலேயே மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் அறிவுறுத்தலின் பேரில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கமலா உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.


கொடுக்கப்பட்ட வாக்குமூலங்களின்படி, சிறுமியின் தாயை அப்பகுதியைச் சேர்ந்த தரகுப் பெண் ஏமாற்றி பணம் கொடுத்ததாகவும், சிறுமி வயதானவர்களின் கைகளில் சிக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகத்திற்கிடமான தரகுப் பெண்ணை பிரதேசத்தில் காணவில்லை என்றும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


 இவர் சில காலமாக இந்த நாசாகார வேலையை மேற்கொண்டு வருவதாகவும், சிறுமியை துஷ்பிரயோகம் செய்த வேறு நபர்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


 கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களான 42, 45, 54 மற்றும் 84 வயதுடையவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.



No comments: