ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சித் தலைவர்கள் மாநாடு இன்று.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சி தலைவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று (26) பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்த சர்வகட்சி மாநாட்டில் சபாநாயகர்,

 பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர், 2022 டிசம்பர் 13 ஆம் திகதி அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட நல்லிணக்க முன்னேற்ற வேலைத்திட்டம் தொடர்பில் மேலும் கலந்துரையாடப்பட்டு கட்சித் தலைவர்களின் இணக்கப்பாடும் எட்டப்படவுள்ளது.


 – ஜனாதிபதி ஊடகப் பிரிவு



No comments: