மருத்துவமனைகள் பெரும் நெருக்கடியில்.
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருந்து இல்லை..- வெளியில் இருந்து கொண்டு வருமாறு நோயாளிகள் வேண்டப்படுகின்றனர்.
நாடளாவிய ரீதியில் பல வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு தேவையான மருந்துகள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில கிராமிய மற்றும் புறநகர வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்கள் இல்லாததால் மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதனால், கிளினிக்குகள் மற்றும் வெளிநோயாளர் பிரிவு நோயாளிகள், வெளி மருந்தகங்களில் அதிகளவில் மருந்துகளை வாங்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருந்து தட்டுப்பாடு உள்ள வைத்தியசாலைகளுக்கு மருந்துகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் திரு.கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
No comments: