புதிய வரிக் கொள்கை, இலங்கையின் ஆடைத் தொழிற்சாலைகள் எத்தியோப்பியாவுக்கு.

வெளிப்படைத்தன்மையற்ற வரிவிதிப்பு காரணமாக இந்நாட்டில் இயங்கி வந்த பல தொழில்கள் வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இலங்கை ஐக்கிய தொழில்முனைவோர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.

 அதன் தலைவர் டானியா அபேசுந்தர மத்திய கிழக்கு, துபாய் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளின் வெளிப்படையான வரிவிதிப்பு காரணமாக இந்நாட்டின் ஆடைத் தொழிற்சாலைகள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

 தற்போதைய நெருக்கடியின் காரணமாக இலங்கையில் சுமார் 30 சதவீத வர்த்தகங்கள் தற்போது பாரிய ஆபத்தில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.



No comments: