மட்டு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் - 11 திகதி வரை விளக்கமறியல்

(கனகராசா சரவணன்)


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பு தமிழ்உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை எதிர்வரும் 11 திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் இன்று புதன்கிழமை (04) உத்தரவிட்டார்.

இணையத்தளங்களில் தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் படங்களை பதிவு ஏற்றியமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த மே மாதம் 3ம் திகதி தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகனை ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு அழைக்கபபட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் வைத்து ஏறாவூர் பொலிசார் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட கொரோணா காரணமாக நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாமல் காணொளி மூலம் அவர் நீதவான் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவான் முன்னிலையில் இன்று எடுக்கப்பட்டபோது சுமார் ஒருவருடத்துக்கு பின்னார் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்கமறியவில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

 

No comments: