திருக்கோவில் சாகாமம் பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது

 (கனகராசா சரவணன்)

அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாம வம்மியடி காட்டுப்பகுதியில் புதையல் தோண்டிலில் ஈடுபட்ட 4 பேரை நேற்று வியாழக்கிழமை (06) மாலை சாகாம விசேட அதிரடிப்படையின் கைது செய்ததுடன் புதையல் தோண்டலுக்;கு பயண்படுத்திய உபகரணங்கள் மற்றும் கல்லுடைக்கும் இயந்திரம்;, ஜெனறேற்றர் மோட்டர்சைக்கிள் என்பனவற்றை மீட்டு ஒப்படைத்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய சம்பவதினமான நேற்று மாலை குறித்த காட்டுபகுதியை விசேட புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து முற்றுகையிட்டனர்.

 இதன் போது பெரிய கல்பாறை ஓன்றை கல்லுடைக்கும் கொம்பஸ் இயந்தி மூலம் உடைத்து புதையல் தோண்டலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 பேரை கைது செய்ததுடன் அங்கிருந்து ஜெனறேற்றர் ஒன்றும், கல்லுடைக்கும் கொம்பஸ் இயந்திரம், உட்பட பல உபகரணங்களையும் 3 மோட்டர்சைக்கிள்களையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று, சம்மாந்துறை, மாந்தோட்டம், வட்டினாக்கலை அம்பாறை ஆகிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.   












No comments: