அம்பாறை மாவட்டம் முற்றாக முடக்கம் !
நேற்றிரவு (21) 11 மணிமுதல் எதிர்வரும் 25 காலை 4.00 மணிவரையான பயணத்தடை அமுல்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தின் அத்தியாவசிய தேவை தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியேறாமல் முடங்கியுள்ளனர்.
இந் நிலையில் அம்பாறை மாவட்ட செயலகங்களிற்குட்பட்ட பிரதேச செயலளர் பிரிவுகள் அனைத்தும் முற்றாக முடங்கி காணப்படுவதனை எம்மால் அவதானிக்க முடிகின்றது.
அத்துடன் கடல் மீன்படி, மற்றும் விசாய நடவடிக்கைகள் சுகாதார வழிகாட்டுதல்களுடன் தொடரப்படுகின்றது.
மக்கள் நாட்டின் நலக் கருதி தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீற நடக்காமல் உணர்ந்து செயற்படுவது சிறந்தது.
No comments: