O/L, A/L மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகள் அறிவிப்பு


2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 4 ம் திகதி முதல் ஒக்டோபர் 30 ம் திகதி வரை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் அறிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் ஒக்டோபர் 3ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி இறுதி வாரத்தில் நடத்தவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல. பீரிஸ் தெரிவித்துள்ளார்.

No comments: