நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 672 பேரில் 192 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பு – பாதுக்க பகுதியில் 36 பேர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 117 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 99 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 64 பேர், புத்தளம் மாவட்டத்தில் 39 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 15 பேர் , அம்பாந் தோட்டை மாவட்டத்தில் 16 பேர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலன்னறுவை, மாத்தறை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 07 பேர், மொனராகலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தலா 05 பேர் , முல்லைத்தீவு மாவட்டத்தில் தலா ஒருவர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 15 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: