நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 54 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 221 பேரில் 54 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 12 பேர், கண்டி மாவட்டத்தில் 16 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 29 பேர், காலி மாவட்டத்தில் 08 பேர் , மாத்தறை மாவட்டத்தில் 05 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கேகாலை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா, குருணாகல், அம்பாறை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்ளில் தலா 02 பேர் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 46 பேர், மொனராகலை மாவட்டத்தில் 03 பேர், கிளிநொச்சி மாவட்டங்களில் 06 நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 31 பேர் அடங்கலாக நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: