நாட்டில் நேற்றைய தினம் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் மூன்று கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஆணொருவரும், கொழும்பு 06 பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பெண் ஒருவரரும், மற்றும மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273 ஆக அதிகரித்துள்ளது.
No comments: