நேற்றைய தினம் மூன்று கொரோனா மரணங்கள் பதிவு - முழு விபரம்


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மிதிரிகல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர் வதுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் ஜனவரி 6ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா தொற்று மற்றும் வலிப்பு ஆகிய நோய்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா, இரத்தம் விஷமடைந்தமை மற்றும் சிறுநீரக நோய் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 89 வயதான ஆண் ஒருவர் தனது வீட்டிலேயே ஜனவரி 6ம் திகதி உயிரிழந்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணமாக கொரோனா நிமோனியா தாக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளது.

No comments: