நாட்டின் இன்றைய வானிலை


நாட்டின் சில பகுதிகளில்  100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது.

இதன்படி, வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடை மழை அல்லது  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றரிலும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளைகளில்   இடைக்கிடை மழை அல்லது  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்கூறியுள்ளது.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில், உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு பொது மக்களுக்கு  வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

No comments: