நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள்
நாட்டில் மேலும் 532 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் 432 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 93 பேரும்,வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 7 பேரும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக இராணுவ தளபதி சவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 46,880 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6,897 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 39,661 ஆக அதிகரித்துள்ளது.
மேலும்,தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 222 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: