நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
திருகோணமலை - செல்வநாயகபுரம் பகுதியில் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் திருகோணமலை அன்புவளிபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: