நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 763 பேரில் 241 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 210 பேர், மாத்தறை மாவட்டத்தில் 41 பேர், காலி மாவட்டத்தில் 29 பேர், வவுனியா மாவட்ட த்தில் 28 பேர், திருகோணமலை மாவட்டத்தில் 20 பேர், கண்டி மாவட்டத்தில் 19 பேர் , புத்தளம் மாவட்டத்தில் 12 பேர் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் 12 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

மன்னார் மாவட்டத்தில் 11 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் 10 பேர், களுத்துறை மாவட்டத்தில் 09 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 07 பேர் , அம்பாந்தோட்ட மாவட்டத்தில் 05 பேர் , நுவரெலியா மாவட்டத்தில் 04 பேர் , கேகாலை மாவட்டத்தில் ஒருவர் மற்றும் பதுளை மாவட்டத்தில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மேலும் 89 பேர் அடங்கலாக நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: