நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்
நாட்டில் மேலும் 525 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதில் 93 பேர் சிறைச்சாலை கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதில் 432 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 47,305 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 40,317ஆக அதிகரித்துள்ளதுடன்,தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 6,766 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 225 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: