கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 193 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 525 பேரில் 193 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 94 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

வவுனியா மாவட்டத்தில் 56 பேர் , களுத்துறை மாவட்டத் தில் 29 பேர், காலி மாவட்டத்தில் 22 பேர் , அம்பாறை மாவட்டத்தில் 06 பேர் , குருணாகல் மாவட்டத்தில் 12 பேர் , கேகாலை மாவட்டத்தில் 15 பேர் , புத்தளம் மாவட்டம் 09 பேர், யாழ்ப்பாண மாவட்டத்தில் 09 பேர் மற்றும் அனுராதபுர மாவட்டத்தில் 04 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

இரத்தினபுரி மாவட்டத்தில் 13 பேர், மட்டக்களப்பு மாவட் டத்தில் 04 பேர், நுவரெலியா மாவட்டத்தில் 04 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 04 பேர்,  மாத்தளை மாவட்டத்தில் 05, மாத்தறை மாவட்டத்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் 04 பேர், பொலன்னறுவை மாவட்டத்தில் 15 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வருகைத்தந்த ஒருவரும் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் அடங்குவதாக கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

No comments: