ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒரு கொவிட் 19 மரணம் ; கிழக்கில் 07 மரணங்கள் பதிவு



அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று இனங்காணப்பட்டு கொழும்பு IDH வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ந நபர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளதாக

ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். அகிலன் தெரிவித்தார்.

குறித்த மரணத்துடன் கிழக்கில் மொத்தமாக 07 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மட்டக்களப்பில் 02 மரணங்களும் கல்முனை பிராந்தியத்தில் 05 மரணங்களும் பதிவாகியுள்ளது

உயிரிழந்த நபர் 67 வயதுயை ஆண் என்றும் குறித்த நபருடன் நாட்டில் இன்று 04 கொவிட் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார் 

No comments: