நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொவிட்-19 கொரோனா தொற்று காரணமாக வெளி நாடுகளில் நிர்க்கதிக்கள்ளாகியிருந்த 221 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலியாவிலிருந்து 193 பேர் , ஜப்பானிலிருந்து 07 பேர் மற்றும் கட்டாரிலிருந்து 21 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று வந்தடைந்ததாகத் தெரியவந்துள்ளது.
இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments: