நாட்டின் இன்றைய வானிலை


வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழை வீழ்ச்சியில் ஓரளவான அதிகரிப்பை இன்று இரவு நேரத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணியின் பின்னர் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments: