நாட்டில் மேலும் 348 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 348 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணி இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, சிறைச்சாலை கொத்தணியை சேர்ந்த 72 பேர் மற்றும் பேலியகொடை கொத்தணியை சேர்ந்த 276 பேர் ஆகியோரே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 407 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: