ஆறுமுகன் தொண்டமான் எம்மோடு தான் இருக்கிறார் -மருதபாண்டி ராமேஸ்வரன்.


(நீலமேகம் பிரசாந்த்)
ஆறுமுகன் தொண்டமான் மரணிக்கவில்லை மலையகத்தின் ஒவ்வொரு மக்களினதும் மனதினில் வாழ்த்துக்கொண்டு தான் இருக்கிறார் என முன்னாள் மத்தியமாகாண அமைச்சரும், இ.தொ.காவின் நிதிச்செயலாளரும்,நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார்.

பட்கலை,பீரட்.இன்ஜஸ்ட்ரி,டிலரி,ரொக்கில்,போடைஸ்,டிக்கோயா மணிக்வத்தை,போன்ற பகுதிகளில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின்போதே இவ்விடயத்தை குறிப்பிட்டார்.மேலும் இது தொடர்பாக குறிப்பிடுகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் சேவைகள் மலையகம் முழுவதும் காணப்படுகின்றன.


அவற்றை மக்கள் நாள்தோறும் பார்த்த வண்ணமே உள்ளனர்.அவை ஊடாக ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களின் மனங்களில் வாழ்கின்றார் என குறிப்பிட்டதோடு அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.


No comments: