ஹட்டன் டிக்கோயா போடைஸ் தோட்டமக்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்கி வைப்பு


(சதீஸ்)
ஹட்டன், டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் வெள்ளம் மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு, முன்பு தீயினால் பாதிக்கப்பட்டு ,தொடர்ந்தும்
தற்காலிகூடாரங்களில், வாழ்ந்துவரும், குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் மற்றும் ஆடைகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டது 

 ஜ.டி.எஸ்.பல்கலைகழகத்தின் தலைவர் ,வீ.செனகனின் நிதி ஒதுக்கிட்டில் பாதிக்கபட்ட மக்களுக்கு ,வடமாகாண கிரிஸ்த்தவ அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவரும் பிரதமர் ,மஹிந்தராஜபக்ஸ அவர்களின் மதவிவகாரங்களின் இணைப்பு செயலாளர்,அதிவணக்கத்துக்குரி, பிதா கலாநிதி எஸ்.சந்ரகுமார் தலைமையில் ,இந் நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

தற்காலிக கூடாரங்கள், அமைக்கப்பட்டிருக்கும்பகுதிக்கு நேரடியாக சென்று உலர் உணவூ பொருட்கள் ,மற்றும் பாதிக்கப்பட்டமக்களுக்கான ஆடைகள் சிருவர்களுக்கான இனிப்பு, பண்டங்களும் வழங்கிவைக்கப்பட்டது .

இதேவேலை, பொகவந்தலாவ ரொப்கில் வானகாடுதோட்டபகுதியில்13வயதுடைய வளர்ச்சிகுன்றிய சிருமி ஒருவருக்கு ,முச்சக்கர ,நாற்காலி ,ஒன்றினைதோட்ட முகாமையாளரின் வேண்டுகோளுக்கினங்க உடனடியாக வழங்கி வைக்கபட்டமையும்
குறிப்பிடதக்கது.






No comments: