எமது ஊடகவியலாளர்களினால் அனுப்பப்பட்ட ரமழான் பண்டிகை செய்திகளின் தொகுப்பு
நாடு முழுவதும் ,இன்று பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமது வீடுகளுக்குள்ளேயே - சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில், ஈடுபட்டு அமைதியான முறையில் இம்முறை ரமழான் பண்டிகையை மலையகத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் கொண்டாடினார்கள்.
அத்துடன், கொரோனா வைரஸ், அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து,, நாடு மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் இறைவனிடம் கேட்டுக்கொண்டனர்.
‘ஈதுல் பித்ர்’ எனப்படும் ஈகைத் ,திருநாளானது சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும் இவ்வுலகில், பரப்பும் நோக்கில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் ஒரு உன்னத பெருநாள் விழா.
இஸ்லாமியர்களுக்கு ஐம்பெரும், கடமைகள் உண்டு. அதில் ஒன்று, ரமலான் நோன்பு. ஆண்டுதோறும் வரும் மற்ற ,மாதங்களைக் காட்டிலும், ரமலான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த ,மாதமாகக் கருதப்படுகின்றது.
முப்பது நாட்கள் உண்ணாமல், பருகாமல், ,நோன்பிருந்து இறைவனை விழித்திருந்து, தனித்திருந்து, இறைமறையை, தினம் ஓதி, இல்லாதவருக்கு ஈந்து இறைவழிபாட்டில் ,முழுமையாக த,ன்னை ஈடுபடுத்தி அதன் இறுதியாக இன்பமுடன் பெருநாளை கொண்டாடுகின்றனர்.
அந்தவகையில் வழமையாக ,பள்ளிவாசல்களில் காலைவேளையில் விசேட தொழுகைகள் நடைபெறும். ,மலையக நகரங்களிலுள்ள பள்ளிசவால்களில் முஸ்லிம் மக்கள் அணிதிரள்வார்கள்.
ஆனால், கொரோனா வைரஸ் ,பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஊடரங்கு சட்டம் இம்முறை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ,மக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை, பின்பற்றியே நிகழ்வுகள் நடத்துவதற்கு கட்டுப்பாட்டுகளுடன் ,அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.
இதனால் மக்கள் வீட்டுக்குள் இருந்து ,சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு பெருநாளை ,அமைதியாகக் கொண்டாடினர்.
அட்டன், பொகவந்தலாவ உட்பட, மலையகத்தின் பல நகரங்களிலும் இந்நிலைமையை காணக்கூடியதாக இருந்தது.
(சந்திரன் குமணன், சினாஸ்)
அம்பாறை மாவட்ட முஸ்லீம் மக்கள் இம்முறை றமழான் நோன்பு பெருநாளை எளிமையான முறையில் கொண்டாடிவருகின்றனர்.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (24) இம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பெருநாளிற்கான தக்பீர் சொல்லப்பட்ட நிலையில் தத்தமது வீடுகளில் இருந்து அனைத்து முஸ்லீம் மக்களும் மிக எளிமையான முறையில் றம்ழான் பண்டிகை தொழுகையினை முன்னெடுத்திருந்தனர்.
கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக அரசாங்கம் விடுத்திருந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளின் இருந்து தொழுகையினை நிறைவேற்றியதுடன் நிபந்தனைக்கு அமைய விசேடமாக ஒலிபெருக்கி மூலமாக குரான் ஒதும் முறையும் இங்கு ஒழுங்கமைப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (24) இம் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பெருநாளிற்கான தக்பீர் சொல்லப்பட்ட நிலையில் தத்தமது வீடுகளில் இருந்து அனைத்து முஸ்லீம் மக்களும் மிக எளிமையான முறையில் றம்ழான் பண்டிகை தொழுகையினை முன்னெடுத்திருந்தனர்.
கொரோனா வைரஸ் அனர்த்தத்தின் காரணமாக அரசாங்கம் விடுத்திருந்த அறிவுறுத்தல்களுக்கு அமைய வீடுகளின் இருந்து தொழுகையினை நிறைவேற்றியதுடன் நிபந்தனைக்கு அமைய விசேடமாக ஒலிபெருக்கி மூலமாக குரான் ஒதும் முறையும் இங்கு ஒழுங்கமைப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
(சுஆத் அப்துல்லாஹ்)
உலக வாழ் முஸ்லிம்கள், நோன்பு பெருநாளை இன்று (24) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடி வருகின்றனர்.
இலங்கையில் பரவியுள்ள ,கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, இன்றையை தினம் நாட்டிலுள்ள, முஸ்லிம்கள் அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தங்களது ,வீடுகளுக்குள்ளேயே தொழுகைகளில் ஈடுபட்டு, பெருநாளை ,கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், மட்டக்களப்பு ,மாவட்டம், கல்குடா தொகுதியில் உள்ள மக்கள் வீடுகளிலே தொழுகைகளை ,நிறைவேற்றியமை குறிப்பிடத்தக்கது.
No comments: