நாடளாவிய ரீதியில் 178 பேர் கைது
நேற்றிரவு 10 மணிமுதல், இன்று அதிகாலை 4 மணிவரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டத்தை மீறிய 178 பேர் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதிக்குள், பொலிசாரினால் 38 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மார்ச் ,மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையில் ஊரடங்கை, மீறிய குற்றச்சாட்டில், 66 ஆயிரத்து 519 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற் குறித்த, காலப்பகுதியில் 18 ,ஆயிரத்து 733 வாகனங்களும் பொலிசாரினால், கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் ஊடகப்பிரிவு, விடுத்துள்ள, அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
No comments: