உகந்தை ஆடி வேல் உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்
அருள்மிகு உகந்தை மலை முருகன் ஆலய வருடாந்த ஆடி வேல் மகோற்சவம் எதிர்வரும் 2023.07.18 இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் 15 நாட்கள் பூசைகள் இடம் பெற்று எதிர்வரும் 2023.08.02 புதன்கிழமை தீர்த்தோற்சவம் இடம் பெற்று வியாழன் (03) வைரவர் பூசையுடன் இவ் வருடத்திற்கான உற்சவம் இனிதே நிறைவு பெறும்.
இலங்கையில் காணப்படும் பழம் பெரும் வரலாற்று சிறப்பு மிக்க தலங்களும் இதுவும் ஒன்றாகும் முருகக் கடவுளின் சூரசம்ஹார வரலாற்றுடன் மிக நெருங்கிய தொடர்புடைய திருத்தலமாக உகந்தை விழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது .
No comments: