திடீரென பச்சை நிறமாக மாறிய ஆறு அதிர்ந்து போன மக்கள்

அமெரிக்க நாட்டில் உள்ள சிகாகோ என்னும் ஆறு, புனித பாட்ரிக் பண்டிகையை ஒட்டி பச்சை நிறமாக மாறியுள்ளது.

இலினாய்ஸ் மாகாணத்தில், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மதகுருவான புனித பாட்ரிக்கை நினைவு படுத்தும் வகையில், வருடா வருடம் மார்ச் 17ஆம் திகதி புனித பாட்ரிக் தினம் கொண்டாடப்படுகிறது இதன்போது இங்குள்ள மக்கள் பச்சை நிற ஆடை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

நேற்று சிகாகோ நகரில் சிகாகோ ஆற்றை பச்சை நிறமாக மாற்ற பெரிய படகுகளில் எடுத்து வரப்பட்ட மோட்டார்கள் வாயிலாக பச்சை நிற சாயம் ஆற்றில் கலக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








No comments: