பொது இடத்தில் கஞ்சா நுகர்ந்த இளைஞர்கள் கைது


கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் சந்தி பிரதேசத்தில் பொது வெளியில் கஞ்சா நுகர்ந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் திருநெல்வேலி மற்றும் ஜோகபுரம் பகுதியை சேர்ந்த 30 வயதுக்கு குறைந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 விசாரணைகளின் பின் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளனர்.


No comments: