வாய் பேச முடியாத சிறுமியின் மரணம் - தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலன் கைது
பாணந்துறை ஹிரண பிரதேசத்தில் வாய் பேச முடியாத ஏழு வயது சிறுமியின் மரணம் தொடர்பாக தாய் மற்றும் தாயின் கள்ளக்காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணைகளில் சந்தேகநபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன் இவர்களை விட்டு சென்றதாகவும், அவரது தாயார் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் பின்னர் பண்டாரகம பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர் குறித்த சந்தேக நபருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்
கள்ளக்காதலனின் அழைப்பின் பேரில் குறித்த பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியுடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
விசாரணைகளில் சந்தேகநபர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன் இவர்களை விட்டு சென்றதாகவும், அவரது தாயார் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் பின்னர் பண்டாரகம பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்த அவர் குறித்த சந்தேக நபருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்
கள்ளக்காதலனின் அழைப்பின் பேரில் குறித்த பெண் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த சிறுமியுடன் அவரது தாய் வீட்டுக்குச் சென்றுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
No comments: